OTT அப்டேட்ஸ் :

கண்ணனின் வேலைக்கு ஆப்பு வைத்த ஐஸ்வர்யா.. குடும்பத்துக்காக சண்டைப்போடும் மீனா.. ஜீவா சொன்ன வார்த்த..

கண்ணனின் வேலைக்கு ஆப்பு வைத்த ஐஸ்வர்யா.. குடும்பத்துக்காக சண்டைப்போடும் மீனா.. ஜீவா சொன்ன வார்த்த..Representative Image.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டுடே எபிசோட் (17/04/2023):

இன்றைய எபிசோடில் ஜீவா, மீனாவிடம் முல்லை வளைகாப்பு போக வேண்டாம் என்று சொல்ல, அதற்கு மீனா என்னோட வளைகாப்புக்கு எல்லாரும் நின்னு சந்தோஷமா நடத்தி வைச்சாங்க, இப்ப அவங்க சந்தோஷத்துல நாமளும் கலந்துக்கணும் என்று அடம்பிடிக்கிறார். மீனா எவ்வளவு எடுத்துக் கூறியும் ஜீவா மறுத்துவிடுகிறார். பிறகு மீனாவின் அப்பாவும் அம்மாவும் மீனாவை திட்ட, மீனா டென்ஷன் ஆகி அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

கண்ணனின் வேலைக்கு ஆப்பு வைத்த ஐஸ்வர்யா.. குடும்பத்துக்காக சண்டைப்போடும் மீனா.. ஜீவா சொன்ன வார்த்த..Representative Image

ஜனார்த்தனன் அடுத்து என்ன புது பிரச்சனையை உருவாக்கலாம் என்று யோசிக்கிறார். இந்த பக்கம், ஐஸ்வர்யாவும் கண்ணனும் ஷாப்பிங் செய்தது குறித்து பேசிக்கொண்டே, நகைக்கடையிலும், துணிக்கடையிலும் வாங்கிய பொருள்களை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் லைவில் போடுகிறார். இதை பார்த்து கண்ணன் அதிர்ச்சியாகிறார்.

கண்ணனின் வேலைக்கு ஆப்பு வைத்த ஐஸ்வர்யா.. குடும்பத்துக்காக சண்டைப்போடும் மீனா.. ஜீவா சொன்ன வார்த்த..Representative Image

இந்தப்பக்கம் கதிர் வருத்தத்துடன் முல்லையிடம் நான் வளைகாப்பு வேணாம்ன்னு சொன்னதுல வருத்தமா உனக்கு. நானும், ஜீவாவும் ரொம்ப குளோஸ். எதுவுமே பேசாம ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுப்போம். ஆனா அண்ணன் என்னை நெறைய விஷயத்துல தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்குது. டக்குன்னு வளைகாப்புக்கு வர மாட்டேன்னு அது சொல்லும்ன்னு நான் நினைக்கல என சொல்லி வருத்தபடுகிறார்.

கண்ணனின் வேலைக்கு ஆப்பு வைத்த ஐஸ்வர்யா.. குடும்பத்துக்காக சண்டைப்போடும் மீனா.. ஜீவா சொன்ன வார்த்த..Representative Image

முல்லையும் நம்ம குடும்பம் முன்னாடி நின்னு வளைகாப்பை நடத்தனும் தான் எனக்கும் விருப்பம் என சொல்லிவிடுகிறார். எல்லாத்தையும் பேசவிட்டு கதிர் மறுபடியும் நேராக ஜீவாவை பார்க்க போகிறார். உனக்கு நான் இங்க மறுபடியும் வந்து நிற்குறது பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். நீ வளைகாப்புக்கு வர மாட்டேன் சொன்னதை இன்னமும் ஜீரணிக்க முடியல.

கண்ணனின் வேலைக்கு ஆப்பு வைத்த ஐஸ்வர்யா.. குடும்பத்துக்காக சண்டைப்போடும் மீனா.. ஜீவா சொன்ன வார்த்த..Representative Image

நான் ஒன்னே ஒன்னு கேட்குறேன். இப்போ நடந்த தப்பை பற்றி மட்டும் நீ பேசுறில. அதுக்கு முன்னாடி நம்ம சந்தோசம் இருந்தது எதுவுமே உனக்கு நியாபகம் இல்லையா என கேட்கிறார். ஜீவா வாயடைத்து நிற்கிறார். பிறகு நான் போய்ட்டு வரேன் என்று கூறிவிட்டு கதிர் கிளம்புகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Related Post :